மூடுக

மின்னாளுமை

முன்னுரை

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை(ICT) பயன்படுத்தி,தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

தேசிய மின்னாளுமை திட்டம் (NeGP) :

மின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம்(2003-2007)வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க ,தேவையான கட்டுமானங்களையும் , கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல, கொள்கை முனைப்பு திட்டங்களை (Mission Mode Project) நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னாளுமை திட்ட பார்வை:

பொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.

மின் மாவட்ட திட்டம்:

இங்கே சொடுக்குக